சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!
தமிழகத்தில் ஒரிசா - மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 25ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதன்படி எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக அலுவலம் முடிந்து வீடு திரும்பும் மக்கள் அவதி அடைந்தனர். அதேவேளை, மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
