மோடி மே 14ம் தேதி வாரணாசியில் வேட்பு மனுத் தாக்கல்!
![மோடி](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded_original/2ee25c7ea39979a8884f36da761ce18a.webp)
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பிரதமர் மோடி, தொடர்ந்து 3வது முறையாக உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் இறுதிக்கட்ட தேர்தல் நாளான ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 14ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
ஜூன் 13ம் தேதி வாரணாசியில் வாகன பேரணி நடத்தி வாக்குசேகரிப்பில் ஈடுபட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பேரணி செல்லும் பாதை இறுதி செய்யப்பட்டு விட்டது. பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனை வாரணாசி நகர பா.ஜனதா தலைவர் வித்யாசாகர் ராய் அறிவித்துள்ளார். வாரணாசியில் 1952 முதல் 1962 வரை காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1967ல் சிபிஎம் கட்சி வென்றது. 1971ல் காங்கிரஸ், 1977ல் ஜனதா கட்சி, 1980, 1984-ல் காங்கிரஸ் என வெற்றிகிட்டியது.
1989 தேர்தலில் ஜனதா தளமும் 1991 முதல் 1999ம் ஆண்டு வரையிலான 4 தேர்தல்களில் பா.ஜ.க தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது. 2004ம் ஆண்டு காங்கிரசின் ராஜேஷ் குமார் மிஸ்ரா இத்தொகுதியில் வெற்றி வாகை சூடினார். 2009ல் பா.ஜ.க.,வின் முரளி மனோகர் ஜோஷி வெற்றி பெற்றார். 2014ல் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வென்று நாட்டின் பிரதமரானார். அதே போல் 2019ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்று 2வது முறையாக பிரதமரானார். தற்போது 3வது முறையாக வாரணாசியில் மீண்டும் போட்டியிடுகிறார் பிரதமர் மோடி.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!