இன்று கரையைக் கடக்கிறது ‘மோக்கா’... சென்னை, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

 
65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று! துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

இன்று அதி தீவிர புயலாக உருமாறிய நிலையில், கரையைக் கடக்கிறது மோக்கா. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் இன்று கரையைக் கடக்கும் நிலையில், 210 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயல் காலங்களில் மீனவர்களுக்கும், கடலில் பயணிக்கும் அல்லது துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.

அசானி புயல்

இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர், புதுச்சேரி, காரைக்காலில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மோக்கா புயல், வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் - மியன்மார் கடற்கரை வழியே இன்று கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   

மாண்டஸ் புயல்

இன்று மே13ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் இன்று புயல் கடக்கும் நிலையில், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் உயரக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web