1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைவார்கள்... தமிழக பள்ளிக்கல்வித்துறை அசத்தல் அப்டேட்!

 
எமிஸ்

 

தமிழக அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களின்  பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையேயான ள் என பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் ஆகியோர்களுக்கிடையே  தகவல் பரிமாற்றத்துக்காக ‘டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜுகேஷன்' என்ற பெயரில் புதிய செயலியை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த உள்ளது. 

எமிஸ்
தமிழகத்தில்,  அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், அவர்களுக்கான நலத்திட்டங்கள் ஆகியவற்றை வழங்குவதில் பள்ளிக்கல்வித்துறை முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. அதற்காக  பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) என்ற செயலி வாயிலாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள், தனியார் பள்ளி மாணவ-மாணவிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதன்படி, அரசின் நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

+2 பொதுத்தேர்வு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறதா? பள்ளிக் கல்வித்துறை !
ஆனாலும் இந்த எமிஸ் தளத்தில் மாணவ-மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலர்களின்  எண்கள்  சுமார் 1 கோடியே 16 லட்சம் செல்போன் எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  100 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றதும், பள்ளிக்கல்வித்துறைக்கும், பெற்றோருக்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்துக்காக ஒரு புதிய தளத்தை 'டிபார்ட்மென்ட் ஆப் ஸ்கூல் எஜுகேஷன்' என்ற பெயரில் பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்த உள்ளது. இந்த தளத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு  ஒப்பந்தத்தை பள்ளி கல்வித்துறைசெய்துள்ளது. இந்த புதிய தளத்தில், ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   மே 25ம் தேதிக்குள் இந்த பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயித்து பணிகள் நடந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web