சிறுவன் மர்ம ஸ்பிரே அடித்ததில் 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கண் எரிச்சல், சுவாசப் பிரச்சனை... திருச்செந்தூரில் பரபரப்பு!

 
சிறுவன் மர்ம ஸ்பிரே அடித்ததில் 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கண் எரிச்சல், சுவாசப் பிரச்சனை... திருச்செந்தூரில் பரபரப்பு! 

அறுபடை வீடுகளில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். நேற்று இரவு சுமார் 8 மணிக்கு சிறுவர்கள் கையில் வைத்திருந்த ஸ்பிரே அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் கோயில் வளாகத்தில் இருந்த 10க்கும் மேற்பட்டவர்கள் கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சனை ஏற்பட்டது.உடனடியாக அங்கிருந்த பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்த நிலையில் கோவில் நிர்வாக பணியாளர்கள் அந்த சிறுவனை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி

அந்த சிறுவனின் சொந்த ஊர் திருச்சி மாவட்டம் எனக் கூறினான். அவனுடன் இருந்த அனைத்து சிறுவர்களும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த ஸ்பிரே காருக்கு அடியில் கிடந்தது என எடுத்து கூறினர். 

கடல் சீற்றம் காரணமாக திருச்செந்தூர் கடலில் குளிக்க போலீசார் தடை

காருக்கு அடியில் கிடந்ததாக கூறப்படுகின்ற ஸ்பிரே கோவிலுக்கு வரும் பக்தர்களின் நகை,பணம் பறிப்பதற்காக யாரேனும் மர்ம நபர்கள் மூலம் கொண்டுவரப்பட்டதா அல்லது பெண்கள் தற்காப்புக்காக கொண்டு வந்தது கீழே விழுந்துவிட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?