முன்னாள் அமைச்சர் உட்பட 50க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இருந்து விலகல்... கூண்டோடு அதிமுகவில் ஐக்கியம்.!
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக போன்ற கட்சித் தலைவர்களும், கூட்டணி கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் வீதி வீதியாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் திமுக முன்னாள் சேர்மன் காசி உட்பட 50க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். திமுகவின் மூத்த அமைச்சரான எ.வ வேலுவின் கோட்டையாக திருவண்ணாமலை இருந்து திகழ்வது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
