ஜூலை 7ம் தேதி சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்!

தமிழ்நாட்டில் முகூர்த்த நாட்களுக்கு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் கொடுக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஜூலை 7 ம் தேதி சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழகத்தில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பத்திரப்பதிவுத் துறை அறிவித்துள்ளது.
சுபமுகூர்த்த நாள்களில் அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் அன்றைய தினங்களில் ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் பத்திரப்பதிவுத் துறையால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அந்தவகையில் ஜூலை 7 ம் தேதி சுபமுகூர்த்த நாள் என்பதால் அன்று அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப் பதிவுக்கு கூடுதல் வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு 150 முன்பதிவு வில்லைகள், 2 சார்பதிவாளர் அலுவலகத்துக்கு 300 முன்பதிவு வில்லைகள் மற்றும் அதிக அளவு பத்திரப் பதிவு நடைபெறும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 150 முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!