தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி!!

 
சிற்றுண்டி

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் காலை சிற்றுண்டி முறையை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். முதல்கட்டமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டது. தற்போது இதன் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள் அதாவது 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு எல்லா  பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

சிற்றுண்டி

அதன்படி, ஏற்கனவே தமிழகத்தில்  மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்ததால், இது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ500 கோடி ஒதுக்கீடு செய்து, வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் 1  முதல் 5ம் வகுப்பு வரையிலான 18 லட்சம் மாணவர்கள் பயனடைவர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சிற்றுண்டி

வரும் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்புக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க சாத்தியம் இல்லை என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் கணக்கெடுப்பு நடத்தி, ஒப்பந்தம் வழங்குவதற்காக ஒரு மாத காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ஜூலை மாதத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க வாய்ப்பு உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web