சரியா சிகிச்சை தரல... பிரசவத்தில் தாயும் சேயும் பலி... கதறும் கணவர்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா இரும்பேடு கிரமத்தில் வசித்து வருபவர் 26 வயது கோடீஸ்வரன் . இவர், ஆவடி பட்டாலியன் படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.டிசம்பர் 12ம் தேதி தன்னுடைய மனைவி 24 வயது கர்ப்பிணி அனிதாவை பிரசவத்திற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இன்று காலை அனிதாவுக்கு அறுவை சிகிச்சை நடந்ததில் குழந்தை இறந்து பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தாய் அனிதாவும் பரிதாபமாக உயிரிழந்ததாக கணவரிடம் கூறப்பட்டது.

இருவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்படாததே உயிரிழப்புக்கு காரணம் என அனிதாவின் கணவர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
