தாயை கரண்ட் ஷாக் கொடுத்து கொடூரமாக கொலை செய்த மகன்!
ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் லட்சுமிபாய். தன் கணவனின் இன்னொரு மனைவியின் மகனான நாயக்கைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து சிறுவயதிலிருந்தே வளர்த்து வந்தாள். வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த நாயக், வளர்ப்புத் தாயிடமிருந்து வீட்டைக் கைப்பற்ற முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்காக வளர்ப்புத் தாயிடம் வீட்டை தன் பெயரில் பதிவு செய்யுமாறு நாயக் கூறியுள்ளார். ஆனால் லட்சுமி பாய் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நாயக், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த லட்சுமி பாய்க்கு கரண்ட் ஷாக் கொடுத்து, அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்து வீட்டை வாங்க முயன்றார்.
அப்போதும் லட்சுமி பாய் வீட்டை கொடுக்க கையெழுத்திட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாயக் லட்சுமி பாய் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி கொன்றுள்ளார் . இன்று காலை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் லட்சுமிபாய் கொலை செய்யப்பட்டதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து லட்சுமி பாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நாயக்கின் மீது சந்தேகம் கொண்ட போலீசார், அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். போலீசார் தங்கள் பானியில் விசாரணை நடத்தியபோது, வளர்ப்பு தாய் கொலை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து நாயக் வாக்குமூலம் அளித்தார். சொத்துக்காக தாயை மகன் கொடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
