17 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்த கொலை செய்யப்பட்ட நபர்.. பீதியில் கிராம மக்கள்!

 
 நடுனி பால்

பீகாரின் ரோதஸ் மாவட்டத்தில் உள்ள திவியாரா கிராமத்தில் வசித்து வந்த நடுனி பால் (50). செப்டம்பர் 2008 இல் அவர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதன் பின்னர், அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் சென்று பாலின் நிலத்தை 4 உறவினர்கள் அபகரித்து கொலை செய்ததாக குற்றம் சாட்டினர். இதன் காரணமாக,  கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது பாலின் உடல் கிடைக்கவில்லை. பாலின் நான்கு தந்தைவழி உறவினர்களான ரதி பால், விமலேஷ் பால், பகவான் பால் மற்றும் சத்யேந்திர பால் ஆகியோர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர்.

கொலை

அவர்கள் 2 ஆண்டுகள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு விசாரணை இன்னும் நடந்து வருகிறது. இருப்பினும், வீட்டை விட்டு ஓடிய நடுனி பால், உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் பல ஆண்டுகளாக தலைமறைவாக வசித்து வந்தார். ஜான்சி கிராம மக்கள் சந்தேகத்தின் பேரில் அவர் மீது போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், பீகார் காவல் நிலையத்தில் இறந்த நபராக பதிவு செய்யப்பட்டவர் நடுனி என்பது தெரியவந்தது. இது காவல்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது பெற்றோர் அவர் இளமையாக இருந்தபோது இறந்துவிட்டனர். அவரது மனைவியும் நீண்ட காலத்திற்கு முன்பே அவரை விட்டுச் சென்றுள்ளார். பீகார் வீட்டிற்கு வந்து 16 ஆண்டுகள் ஆகிறது என்று அவர் போலீசாரிடம் கூறினார்.

போலீஸ்

முறையான விசாரணைக்குப் பிறகு, போலீசார் அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். 17 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வரும் சூழலில், கொலை செய்யப்பட்ட நபர் திரும்பி வந்தது கிராமத்தில்  பேசுப்பொருளானது. இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பகவான் பால், "நாங்கள் சிறையில் கழித்த விலைமதிப்பற்ற ஆண்டுகளையும் நீதிமன்றத்திற்கு அலைந்து திரிந்ததையும் யார் நமக்குத் திருப்பித் தருவார்கள்?" என்று கேட்டார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!