ப்ளீஸ்!! அப்பாவை கைது பண்ணுங்க!! போலீசை அதிர வைத்த சிறுவன்!!

 
சுபாம்பி

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம் இஸ்லாம்பேட்டை கிராமத்தில் சுபானி - சுபாம்பி தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 9 வயதில் ரஹீம் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், சிறுவன் ரஹீம் அங்குள்ள காவல்நிலையம் சென்று அளித்த புகாரால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுவன் எழுத்துப்பூர்வமாக இல்லாமல், வாய்மொழியாக புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னுடைய தந்தை தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதாகவும், பின்னர் தனது தாயை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார். 

சுபாம்பி

அடிக்க வேண்டாம் என்று தாய் கெஞ்சினாலும் விடாமல் தாயை அடிப்பதால், தனது தந்தை மீது நடவடிக்கை எடுக்குமாறு சிறுவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தந்தையின் செயலை தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றும் போலீசாரிடம் சிறுவன் புகாராக கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ந்த போலீசார், உடனடியாக சிறுவனை அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்றனர். பின்னர் சிறுவனின் தாய், தந்தையான சுபானி - சுபாம்பி இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தார். அப்போது, சிறுவனின் தாயாரை தந்தை அடித்து துன்புறுத்தி வருவது உறுதியானது. இதையடுத்து, தந்தை சுபானியை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தார்.

சுபாம்பி

மீண்டும் இதுபோன்று நடந்துகொண்டு, சிறுவன் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினர். தாயை தந்தை கொடுமைப்படுத்துவதை தாங்க முடியாமல் மகன் போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web