மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி... தேவநாதனின் ரூ.280 கோடி சொத்துக்கள் முடக்கம்!
சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.525 கோடி மோசடி செய்ததாக அதன் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தேவநாதனின் 5 வங்கி கணக்குகள் உட்பட நிதி நிறுவனத்தின் 18 வங்கி கணக்குகள், குணசீலன் மற்றும் மகிமைநாதனின் வங்கிக் கணக்குகள் என மொத்தம் 27 வங்கி கணக்குகளை முடக்கப்பட்டுள்ளது.
தேவநாதன் நடத்தி வந்த விண் டிவி நிறுவன, அடையாறு, வண்ணாரப்பேட்டை ,சைதாப்பேட்டை, பெரம்பூர் ஆகிய இடங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நிதி நிறுவன கிளை அலுவலகங்கள் என 8 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் தேவநாதனின் மயிலாப்பூர் அலுவலகத்தில் இருந்து 3 கிலோ தங்கம் மற்றும் வெள்ளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் ரூ.280 கோடி சொத்துக்கள் முடக்கபட்டது. தி மைலாப்பூர் இந்து பரிமணண்ட் ஃபண்ட் நிதி லிமிடெட் மோசடி வழக்கில் தேவநாதனின் ரூ.280 கோடி சொத்துக்கள் முடக்கபட்டன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!