மாயமான நர்சிங் மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கடந்த 2 நாட்களுக்கு முன் 20 வயது சௌமியா காணாமல் போனார். இவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கறம்பக்குடி தாலுகா கருக்காகுறிச்சி வடக்கு கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மூத்த மகள் சௌமியா (20) புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் இரத்தப்பரிசோதனை குறித்த டிப்ளமோ படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் அவரது வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கிணற்றில் இருந்து சௌமியாவின் உடல் மீட்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி சௌமியா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மாணவியின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மாணவி சௌமியா இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் மாணவி சௌமியாவின் உடலை வாங்க மறுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தற்போது மாணவி இறப்பு விவகாரத்தில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவிலேயே மாணவி உயிரிழப்புக்கு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவி சௌமியாவின் உடலை பெறாமல் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு நடவடிக்கை எடுத்தவுடன் உடலை பெற்றுக்கொள்கிறோம் என கூறிச் சென்றனர்.

இந்நிலையில் சௌமியாவின் உயிரிழப்பு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் உயிரிழந்த சௌமியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பெயரளாக பரவி வருகிறது. இதனை அடுத்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் எக்ஸ் தளத்தில் பரவும் செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சௌமியாவின் தந்தை தனது மகளை காணவில்லை என்று வடகாடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்ததாகவும் பெண் காணவில்லை என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில்ம் அவரது வீட்டில் அருகாமையில் உள்ள கிணற்றிலிருந்து சௌமியாவின் சடலம் வைக்கப்பட்டதாகவும் சௌமியாவின் உடலில் உள் காயமோ வெளிக்காயமோ இல்லாத நிலையில் மருத்துவரால் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இறப்பின் காரணத்தை அறிய வேதியியல் பகுப்பாய்வு அறிக்கை மற்றும் டையாட்டம் அறிக்கை, ஹிஸ்டோ பேத்தாலாஜிக்கல் அறிக்கை பெற வேண்டியது உள்ளது என்றும் மேலும் உயிரிழந்த சௌமியா மணிகண்டன் என்பவரை காதலித்து வந்ததாகவும் பின்னர் சொந்த காரணங்களுக்காக இருவரும் பிரிந்த நிலையில் அந்த மன அழுத்தத்தில் சௌமியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் எக்ஸ் வலைதளத்தில் உயிரிழந்த சௌமியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பரவும் செய்தி முற்றிலும் பொய்யானது ஆதாரமற்றது,இதுபோல் பொய்யான தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
