முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த வெள்ளை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை... நயினார் நாகேந்திரன்.!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில் முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த வெள்ளை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார்.

‘அதிமுக கட்சியில் ஏற்பட்ட பிளவிற்கு பின்னணியில் இருப்பது திமுக தான். செங்கோட்டையன் எங்கே சென்றிருக்கிறார் என எனக்குத் தெரியாது. நாளை மறுநாள் நான் டெல்லிக்கு செல்ல உள்ளேன்.

போராடுபவர்களையும், கேள்வி கேட்போரையும் நசுக்கும் அரசாக திமுக அரசு இருக்கிறது. தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் திமுக கூறியதைத்தான் கேட்டனர். திமுகவின் தூண்டுதலில்தான் அனைத்து பிரச்னைகளும் இங்கு நடக்கின்றன” என ஆவேசமாக கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
