3வது முறையாக மோடி பிரதமர்... காரமடை அருகே ரகசிய பூஜை!

 
3வது முறையாக மோடி பிரதமர்... காரமடை அருகே ரகசிய பூஜை!

மக்களவைத்தேர்தல் நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை நாளை ஜூன் 4ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்ற வருகின்றன. இந்நிலையில் மக்களவைத்தேர்தலில் இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்த பின்னர் எக்ஸிட் போல் அதாவது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக 350க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காரமடை அடுத்துள்ள கண்டியூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக பாஜகவின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ரகசியமாக ஹோமம் வளர்த்து சிறப்பு சிவ காளி பூஜை மற்றும் கோபூஜை செய்து வழிபட்டுள்ளார்.

மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமராக தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ரகசியமாக பூஜை நடத்தியது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 

பாரத பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்றும் மோடி 3ம் முறையாக பிரதமராக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என இந்த சிறப்பு பூஜையில் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பூஜை ஈடுபட்டதாக பாஜக நிர்வாகிகள் தகவல்  தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web