தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம்... தேசிய பசுமை தீர்ப்பாயம் கேரளாவுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் கேரள அரசின் மருத்துவ கழிவுகள் கொட்டப்ப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கேரள அரசுக்குகடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லையில் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்த நிலையில், கேரளாவில் இருந்து வந்த அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து பின்னர் லாரி மூலம் கேரளாவிற்கே கொண்டு சென்றனர். தேசிய பசுமை தீர்ப்பாயம் மருத்துவக் கழிவுகளை கொட்ட உத்தரவிட்ட மருத்துவமனை, ரிசார்ட்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் தீர்ப்பாயம், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பதை 7 நாட்களில் தெரிவிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேரள அரசின் நடவடிக்கை திருப்தி அளிக்காவிட்டால், தீர்ப்பாயமே உத்தரவு பிறப்பிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கழிவுகள் கொண்டு வருவதை தடுக்க எல்லை மாவட்டங்களில் சிறப்பு அதிரடிப்படையை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!