செப்டம்பர் 22 முதல் ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு கொண்டாட்டம்!
நவராத்திரி செப்டம்பர் 22 முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் கிண்டி ஆளுநர் மாளிகையில் 'நவராத்திரி கொலு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.
இந்த கொண்டாட்டத்தில் தினமும் மாலை 4 முதல் 5 மணிவரை நடைபெறும் வழிபாடு நிகழ்ச்சியிலும் மாலை 5 முதல் 6 மணி வரை நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் தனிநபர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையாளர்களாக கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள தனிநபர்கள், பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் https://tnrajbhavantour.tn.gov.in/navaratri/ என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவில், தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, பார்வையிட வரும் தேதி போன்ற விவரங்கள் இடம் பெற வேண்டும்.'முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் தினம் அதிகபட்சம் 200 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

விண்ணப்தாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேதியையும், நேரத்தையும் மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்துக்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக, ஆளுநர் மாளிகைக்கு வந்தடைய வேண்டும். தங்களுக்கு அனுப்பப்பட்ட உறுதிப்படுத்திய மின்னஞ்சலின் நகல் மற்றும் அசல் புகைப்பட அடையாளச் சான்றை கொண்டு வர வேண்டும். ஆர்வமுள்ள வெளிநாட்டினரும் 'நவராத்திரி கொலு 2025' கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளலாம் அவர்களின் அசல் பாஸ்போர்ட் மட்டுமே அடையாளச் சான்றாக ஏற்றுக் கொள்ளப்படும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
