நயன்தாரா - தனுஷ் வழக்கு… இறுதி விசாரணையை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்!

 
 நடிகை நயன்தாரா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா. நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

தனுஷ்

இந்த வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீதான விசாரணையை இன்று ஜனவரி 8ம் தேதி ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  அதன்படி, இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கின் விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.  

நயன்தாரா

இதனையடுத்து, வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம்  ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது. முன்னதாக, இந்த ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் தன் அனுமதியைப் பெறாமல் பயன்படுத்தப்பட்டதாக படத்தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் சார்பில், ரூ.10 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web