720க்கு 720 மதிப்பெண்கள்.... நீட் தேர்வில் தமிழக மாணவன் சாதனை!

 
நீட்

 விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியில் வசித்து வருபவர்  ரயில்வே அதிகாரியான பிரபாகரன். இவருடைய மகன்  ரஜநீஷ் என்ற மாணவன் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளான். இதனால் தமிழகத்திற்கே பெருமை.  நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்ததையடுத்து ரஜநீஷ்க்கு அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் இனிப்புகள் ஊட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர்.  
சிறு வயதிலிருந்து ரஜநீஷ் மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவுகளோடு பள்ளி படிப்பினை முடித்துள்ளார்.

நீட் நுழைவுத்  தேர்வு

அவர்  10 ம் வகுப்பில் 482 மதிப்பெண்களும் 12ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்துள்ளான். நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நீட்தேர்விற்கு சிறப்பு வகுப்புகளில் பயிற்சி பெற்று அதிக முழு மதிபெண் எடுத்துள்ளதாக ரஜநீஷ் தெரிவித்துள்ளார். மருத்துவத்தில் இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக ஆக வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும் அதிகமாக பயிற்சி மேற்கொண்டதால் அதற்கான பலன் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  மாக் டெஸ்ட் அதிகமாக எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என நீட் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் ரஜநீஷ் கூறியுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web