நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

இந்த ரயில் சேவையானது கடந்த 2022-ம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவை கடந்த மாதத்துடன் நிறைவு பெற்றது. இதையடுத்து மேட்டுப்பாளையம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரயிலை வருகிற ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கோவை மேட்டுப்பாளையம்- நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை-மேட்டுப்பாளையம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:- 06030) 6ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்தடையும்.
இதே போல மேட்டுப்பாளையம்-நெல்லை இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் (எண்:-06029) வருகிற 7-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை திங்கட்கிழமை தோறும், மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!