கோவையை தொடர்ந்து நெல்லை மேயரும் ராஜினாமா!

 
சரவணன்

 நெல்லை மாநகராட்சி திமுக மேயர்  பி.எம்.சரவணன்.  நெல்லையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவதில் ஒவ்வொரு மாதமும் பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன. சமீபத்தில் மாநகராட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர்களே  கலந்து கொள்ளாத நிலையில்  கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.  இந்நிலையில் நேற்று மேயர் பி.எம்.சரவணன் சென்னைக்கு சென்று இருப்பதாக தகவல்கள் வெளியாகின.  

கோவை மேயர் கல்பனா

கட்சி தலைமையிடம் தனது பதவியை ராஜினாமா செய்வதற்குரிய கடிதத்தை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவுறுத்தலின்பேரில் நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  முன்னதாக கோவை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து தி.மு.க.,வை சேர்ந்த கல்பனா ராஜினாமா செய்துள்ளார்.  

முதல்வர் ஸ்டாலின்

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜினாமா கடிதத்தை மேயர் கல்பனா வழங்கினார். கல்பனா தனது தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் நெல்லை மற்றும் கோவை  மேயர்கள் ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web