நேபாள பிரதமர் ராஜினாமா? வெடித்த போராட்டம் ... களமிறங்கிய ராணுவம்!

 
கே.பி.சா்மா ஓலி


 
நேபாளத்தில்  'யூடியூப்', 'இன்ஸ்டாகிராம்', 'ஃபேஸ்புக்' உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக  இளைஞா்கள் நடத்திய போராட்டம், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது. இந்நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்  மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்த நிலையில், அரசின் மிகப்பெரிய ஊழல் மற்றும் பொருளாதாரத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.


இந்நிலையில், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று நேபாள காங்கிரஸ் கட்சியின்  உள்துறை அமைச்சர், விவசாயத் துறை அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில், தற்போது நேபாள பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.பி.சா்மா ஓலி
நேபாள பிரதமராக கே.பி.சா்மா ஓலி பதவியேற்றதில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருவதாக தொடர்ந்து  குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் நேற்று  நடைபெற்ற போராட்டம்  சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரானது மட்டுமன்றி ஊழலுக்கு எதிரானதாகவும் மாறி  தொடர்ந்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?