ஆடிப்பெருக்குக்கு வந்து சென்ற புதுமாப்பிள்ளை வாகனம் மோதி உயிரிழப்பு!

 
விபத்து

ஆடிப்பெருக்குக்கு மாமியார் வீட்டிற்கு வந்து சென்ற புதுமாப்பிள்ளையின் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மனைவி இந்த விபத்தில் படுகாயம் அடைந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஏழுமரம் பகுதியைச் சேர்ந்தவர் டிராவிட் (26). கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (23) என்பவருடன் இவருக்கு இருவீட்டார் நிச்சயித்த நிலையில் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம் கல்யாணம் கும்பம்

திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள தனியார் மருத்துவ பரிசோதனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த டிராவிட், ஆடிப்பெருக்கு விழாவிற்காக மாமியார் வீட்டுக்கு தனது மனைவியுடன் சென்றிருந்தார். விழா முடிந்த நிலையில் தனது மனைவியுடன் கூடலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருப்பூருக்கு திரும்பி கொண்டிருந்தனர். குன்னூர் காட்டேரி அடுத்த பால்கார லைன் அருகே சென்றுக் கொண்டிருந்த போது, கோவையில் இருந்து குன்னூர் நோக்கி எதிரே வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தம்பதியர் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

திருமணம்

இந்த விபத்தில் தலையில் அடிபட்டு டிராவிட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மாரியம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.

இந்த விபத்து குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற சரக்கு வாகனத்தை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?