7 நாளில் திருமணம்... பத்திரிகை கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை , தாய், தந்தை விபத்தில் பலி!

 
ஆ
 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  மாடாமுண்டி பகுதியில் வசித்து வருபவர்  நாராயணன். இவருக்கு  செப்டம்பர் 4ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.  இதற்காக தனது உறவினர்களுக்கு பத்திரிகை கொடுப்பதற்காக நாராயணன், தனது தந்தை ஆறுமுகம், தாய் செல்லியம்மாள் இருவருடன்  இருசக்கர வாகனத்தில் திருக்கோவிலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். 

ஆம்புலன்ஸ்
அந்த சமயத்தில் எதிரில் வந்த கார் மோதியதில்  இருசக்கர வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதில் மூவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். அவர்களை அவ்வழியாக சென்றவர்கள்  மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  

போலீஸ்

மருத்துவமனையில் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ந் நிலையில் மூவரும்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தவெக நிர்வாகி என கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை தேடும் பணியில்   ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், பத்திரிகை கொடுக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?