அடுத்த வாரம் மீண்டும் புதிய காற்றழுத்த பகுதி... டிச.23 முதல் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும்... வானிலை ஆய்வாளர்கள் தகவல்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை டிச.23 முதல் மீண்டும் தீவிரம் அடையும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்னர். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து சென்றது. இது நாளை மறுதினம் டிசம்பர் 22ம் தேதி சென்னைக்கு கிழக்கே வந்தடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அதன்பின்னர், 23ம் தேதி டெல்டா - வட இலங்கையையொட்டி நகர்ந்து சென்று, அதற்கு அடுத்த நாளான டிசம்பர் 24ம் தேதி பாக்நீர் இணைப்பு அல்லது டெல்டா பகுதிகள் வழியாக உள்ளே நுழைந்து அரபிக்கடலை சென்றடைய இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தாழ்வுப்பகுதி காரணமாக வருகிற 23ம் தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும். அதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக மழையை கொடுத்து சென்றே அரபிக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப்பகுதி வலுவிழக்க இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக லட்சத்தீவு பகுதியில் இருந்து வரும் நிகழ்வு, சுமத்ரா தீவில் இருந்து வரும் நிகழ்வு ஒன்றிணைந்து 26ம் தேதி மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வாளர் நா.செல்வக்குமார் தெரிவித்தார். இது மேலும் தமிழக பகுதிகளை நோக்கி நகர்ந்து, 28ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை மழையை கொடுக்கக்கூடிய நிகழ்வாகவே இருக்கும் என்று கூறினார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
