புதிதாக கட்டப்பட்ட பாம்பன் தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு... ரயில்கள் தாமதம்!

 
ராமேஸ்வரம் பாம்பன்

ராமேஸ்வரத்தில் கடலின் நடுவே ரூ.545 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரயில்கள் தாமதமாக சென்றன.

கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் புதிய பாம்பன் பாலத்தில் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன. கடலில் கப்பல்கள் செல்லும் போது பாலத்தின் நடுப்பகுதி செங்குத்தாக தூக்கப்படும். பின்னர் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படும்.

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம்

இந்நிலையில் நேற்று கப்பல்கள் செல்வதற்காக பாலம் செங்குத்தாக தூக்கப்பட்டது. பின்னர் பாலத்தை இறக்கும்போது தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில்வே பணியாளர்கள், பாலத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பாலத்தை கீழே கொண்டுவந்தாலும், அது உடனடியாக தண்டவாளத்துடன் இணையவில்லை. ரயில்வே ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி கோளாறை சரி செய்தனர்.

ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பால

பாம்பன் புதிய பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுப்புரம் இண்டர்சிட்டி ரயில் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. அதேபோல, தாம்பரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் சுமார் ஒரு மணி நேரம் தாமதமானது. இதனால் ரயில் பயணிகள் அவதியடைந்தனர். பாலம் திறந்த இரண்டு மாதங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?