எவ்வளவு சொல்லியும் கேட்கலை... மகளின் காதலன் தலையைத் துண்டாக்கி பெண்ணின் தந்தை வெறிச்செயல்!

 
கமலேஷ்வரன்

எத்தனையோ முறை மகளிடமும், இதெல்லாம் குடும்பத்துக்கு ஆகாதுன்னு சொல்லிப் பார்த்தாச்சு. அந்த பையனையும் தனியே கூப்பிட்டு, அடிச்சும்  சொல்லிப் பார்த்தாச்சு. வீடு தேடி போயும் மிரட்டியாச்சு. ஆனாலும் கேட்கலை.. என மகளின் காதலன் தலையைத் துண்டாக்கி, கொடூரமாக கொலைச் செய்திருக்கிறார் பெண்ணின் தந்தை. இந்த கொலைக்கு, பெண்ணின் தாயும், சகோதரனும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.

தேனி, வீருசின்னம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் கமலேஷ்வரன். தந்தையை இழந்த கமலேஷ்வரன், 12ம் வகுப்பு முடித்திருந்த நிலையில், தாய் மற்றும் தாத்தா, பாட்டி அரவணைப்பில் வளர்த்து வந்தார்.  சமூக வலைதளங்களில் அதிகளவில் ஆர்வத்துடன் இருந்த இவருக்கு போடேந்திரபுரத்தை சேர்ந்த சன்னாசி என்பவரின் மகளுடன் அறிமுகம் ஏற்பட்டது. சன்னாசியின் மகள் தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். 

சமூக வலைதளம் மூலமாக இவர்களுக்கிடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இந்த விவகாரம் சன்னாசியின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து சன்னாசி, அவரது மனைவி தமிழ்செல்வி, மகன் ஜெயபிரகாஷ் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழ்செல்வி

எனினும் இருவரும் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சன்னாசி, அவரது மனைவி தமிழ்செல்வி, மகன் ஜெயபிரகாஷ் ஆகிய மூன்று பேரும் கமலேஷ்வரன் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த கமலேஷ்வரனின் தாய், தாத்தா, பாட்டியிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறியதால், சன்னாசி குடும்பத்தினர் வீட்டிற்கு வந்த கமலேஷ்வரனை கடுமையாக தாக்கியுள்ளனர். மீண்டும் தனது மகளிடம் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது என எச்சரித்து உள்ளனர். எனினும் இருவரும் காதலை நிறுத்தவில்லை. அதன்பிறகே காதல் நெருக்கமானதாக கூறப்படுகிறது. இது சன்னாசிக்கு கடும் ஆத்திரம் அடைந்தார்.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு கமலேஷ்வரன், தனது காதலியை அழைத்து சென்றுள்ளார். இந்த விவகாரமும் சன்னாசி குடும்பத்துக்கு தெரியவந்ததால் கோபம் அதிகமானது, இதனையடுத்து மகளின் காதலனை கொலை செய்ய சன்னாசி குடும்பத்துடன் திட்டம்போட்டார்.

இந்த நிலையில் கமலேஷ்வரன் வீட்டை விட்டு விவசாய தோட்டத்திற்குச் செல்வதை அறிந்த சன்னாசி அவரின் பின்னால் சென்று தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக கமலேஷ்வரனை குத்தியுள்ளார். இதில் கமலேஷ்வரன் சரிந்துவிழுந்து மயக்கமடைந்தார். எனினும் ஆத்திரம் தீராத சன்னாசி அவரின் கழுத்தை முற்றிலுமாக துண்டித்து தலையை தனியாக எடுத்து அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்.

தமிழ்செல்வி

வீட்டைவிட்டு வெளியே சென்று வெகு நேரம் ஆனதால் பயந்து போன கமலேஷ்வரனின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்த போது ஊருக்கு ஒதுக்குப்புறமான தோட்டத்தில் கழுத்து துண்டிக்கப்பட்ட நிலையில் கமலேஷ்வரன் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் விவசாரணை நடத்தினர். இரு கிராமத்திலும் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் சன்னாசி தான், மகளின் காதலனை கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து சன்னாசி, கொலைக்கு உடந்தையாகச் சன்னாசியின் மனைவி தமிழ்செல்வி மற்றும் மகன் ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டனர். 12 வகுப்பு மாணவனைக் காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! வீடியோ!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web