இனி 13இலக்க மொபைல் நம்பர்... இந்திய தொலைத்தொடர்பு துறை திடீர் அறிவிப்பு!
![மொபைல்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/3d856de1f323aaf04fb14797db788a94.png)
தற்போதைய வாழ்க்கை முறையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனின் பயன்பாடுகள் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இந்நிலையில் மத்திய டெலிகாம் அமைச்சகம் மொபைல் எண்களை மாற்றுவது குறித்து முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக மொபைல் எண்கள் எனில் 10 எண்கள் வரை இருந்து வருகிறது.
இனி மொபைல் நம்பர்கள் எல்லாம் பத்து நபர்களுக்கு மேல் இருக்கலாம். இந்தியாவில் 21 வருடங்களுக்கு பிறகு இந்த மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.இது குறித்து வெளியான குறிப்பில் மொபைல் எண்கள் இனி 11 லிருந்து 13 இலக்கமாக இருக்கலாம். இதனை பயனர்களுக்கு ஏற்ற வகையில் செயல்படுத்துவது குறித்து இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை நடத்தி வருகின்றது. இந்த மாற்றத்தால் பயனர்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் அமைக்கப்படும். அதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!