கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கள் நடத்த தடை... பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. வெயில் கொளுத்தி வரும் சுழலில் சிறப்பு வகுப்புக்கள் குறித்து பள்ளிக்கல்வித் துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோடை விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோடை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும் , இதனால் மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இப்புகார் சார்பாக அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும். சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்களை வரச்சொல்லி மன அழுத்தம் தரக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!