ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்... வேட்புமனு தாக்கல் தொடங்கியது!

 
ஈரோடு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, கடந்த 2013 ஜனவரி 4ம் தேதி உயிரிழந்த நிலையில், அதன் பின்னர் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

ஈரோடு

இந்நிலையில் கடந்த டிசம்பர் 14ம் தேதி உடல் நல்குறைவால் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானதால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. 

தேர்தல்

இன்று முதல் வருகிற ஜனவரி 17ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்த நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் வழங்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web