பெத்தவங்களே... உஷார்... ஒன்னு..ரெண்டு கிடையாது... 50 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து உல்லாசம்!

 
பெண்

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியை சேர்ந்தவர் தபேஷ் குமார் பட்டாசார்யா(55). இவர் 1992ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. பின்னர் மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு தபேஷ் திடீரென தலைமறைவானார்.

பெண்

பின்னர் கர்நாடகா மாநிலம் பெங்களுருவுக்கு குடியேறிய அவர் வேலை வாய்ப்பு நிறுவனத்தை தொடங்கினார். அவரிடம் வேலை கேட்டுசென்ற இளைஞர்கள், இளம்பெண்கள் பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்தார். பின்னர் ஷாதி மேட்டரிமோனி இணையதளம் மூலம் பெரும் மோசடியை தொடங்கினார். விவகரத்து ஆன பெண்கள், கணவரை இழந்த பெண்களை குறிவைத்து தனது வலையில் வீழ்த்தியுள்ளார். வரன்தேடி அந்த நிறுவனத்தை தொடர்புகொள்ளும் பெண்களிடம் வேறுவேறு பெயர்களில் தபேஷ் அறிமுகமானார்.

அதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். திருமணமான பின் அந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, நேரம்பார்த்து பணம், நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பியோடிவிடுவார்.

இவர் மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், திரிபுரா, உத்தரபிரதேசம், ஒடிசா என பல மாநிலங்களிலும் பெண்களை ஏமாற்றியது  அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், பல பெண்கள் புகார்களை கொண்டு ஹரியானா போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு ஒடிசாவில் தலைமறைவாக இருந்த தபேஷை கைது செய்தனர். 

பெண்

அதன்பிறகு நடந்த விசாரணையில்தான் இவ்வளவும் அம்பலமாகியுள்ளளது. இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். பல்வேறு மாநிலங்களுக்கு வழக்கு விரிவடைவதால் காவல்துறையில் தனிப்பிரிவு தொடங்கி விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளனர்.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

From around the web