மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி முதல்வர்!!

 
மாணவி

தென்காசி ஆசாத்நகரில் தனியார் கல்வி இன்ஸ்டிடியூட் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த இன்ஸ்டிடியூட்டில் தென்காசி நடுப்பேட்டைத் தெருவைச் சேர்ந்த முகமது அன்சாரி (55) என்பவர் முதல்வராக உள்ளார். முகமது அன்சாரி மீது பல்வேறு புகார்கள் உள்ளன. 

மாணவி

இந்த நிலையில், முகமது அன்சாரி இன்ஸ்டிடியூட்டில் பயிலும் 17 வயது மாணவி ஒருவரிடம் மட்டும் கவனம் செலுத்தியுள்ளார். அந்த மாணவியிடம் பாலியல் நோக்கத்தோடு, இரட்டை அர்த்த வசனங்களில் பேசுவதும், பாலியல் உணர்வைத் தூண்டுவது போல் பேசுவது, தவறான நோக்கத்தில் பார்ப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனை உணர்ந்த மாணவி, ஒருகட்டத்தில் முதல்வர் என்றபோது முகமது அன்சாரியை எச்சரித்துள்ளார். எனினும் அவர் தனது காமலீலை நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. ஒருகட்டத்தில் நிலைமை கைமீறி செல்லக்கூடும் என உணர்ந்த மாணவி, முதல்வரின் நடவடிக்கைகள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

மாணவி

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இதுதொடர்பாக குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், தனியார் இன்ஸ்டிடியூட் முதல்வர் முகமது அன்சாரியின் சேட்டையை கண்டுபிடித்து உறுதி செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web