சொல்லிலடங்கா துயரம்... இரட்டைக்குழந்தைகளை ஈன்ற மகப்பேறு மருத்துவர் பிரசவத்தில் மரணம்!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி ராசு - தமிழரசி தம்பதியினரின் மகள் அஞ்சுதா. இவர் , புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் பல் மருத்துவர் கார்த்திக். இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் அஞ்சுதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று பிரசவ வலி ஏற்பட்டதும் புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளனர். பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த அஞ்சுதா வலி வந்து நீண்ட நேரம் கழித்தே காலதாமதமாக அனுமதிக்கப்பட்டார்.
“தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம்கூட காணாமல் உயிரிழந்த மருத்துவர் அஞ்சுதா-வின் மறைவு பெருந்துயரம்”
— Dr C Vijayabaskar - Say No To Drugs & DMK (@Vijayabaskarofl) May 2, 2024
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு - தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான… pic.twitter.com/JwjBo9AXaA
இதனால் பிரசவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் புதுக்கோட்டை மக்களை பெரும்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “தன் பிஞ்சுக் குழந்தைகளின் முகம்கூட காணாமல் உயிரிழந்த மருத்துவர் அஞ்சுதா-வின் மறைவு பெருந்துயரம்” எனக் குறிப்பிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராசு - தமிழரசி தம்பதியினரின் அன்பு மகளும், புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையின் பயிற்சி மருத்துவருமான Dr. R.அஞ்சுதா M.S.,(OG) -ன் அகால மரணம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. பிரசவ வலி ஏற்பட்ட உடனே சிறிதும் தாமதமின்றி மருத்துவமனைக்கு சென்றிருக்க வேண்டும். மிகவும் காலதாமதமாய் தான் பணியாற்றிய இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரட்டைக் குழந்தைகள் ஈன்றெடுத்து உயிரிழந்திருக்கிறார்.

மகப்பேறு காலத்தில் நேரத்தின் அருமையை நன்கறிந்து எத்தனையோ பிரசவங்களை செய்திருக்க வேண்டிய மகப்பேறு மருத்துவரே கால தாமதத்தால் உயிர் பிரிந்தது சொல்லிலடங்கா துயரம். மருத்துவர் அஞ்சுதாவை இழந்து வாடும் அவரது கணவர் பல் மருத்துவர் கார்த்திக் மற்றும் செங்கல் இறக்கும் வேலையும், சித்தாள் வேலை செய்தும் மகளை படிக்க வைத்த பாசமிகு பெற்றோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
