மே 6ம் தேதி ஸ்ரீரங்கம் சித்திரைத்திருவிழா தேரோட்டம்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா நேற்று ஏப்ரல் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே6ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. உலக பிரசித்திபெற்ற ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்று மண்டபத்திற்கு வந்தார். நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
மாலையில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து, இரவில் சந்தனு மண்டபத்தை அடைந்தார். இரவில் யாகசாலையை சென்றடைந்து அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். விழாவின் 2-ம் நாளான இன்று மாலை கற்பக விருட்சம் வாகனத்திலும், நாளை ஏப்ரல் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும் வீதி உலா வருகிறார்.

மே 1 காலை - இரட்டை பிரபை
மாலை-கருடவாகனம்
2ம் தேதி காலை -சேஷ வாகனம்
மாலை -அனுமந்த வாகனம்
3ம் தேதி காலை - தங்க ஹம்ச வாகனம்

மாலை -யானை வாகனம்
மே 4- நெல்லளவு கண்டருளுதல்
மே 5- காலை வெள்ளிக்குதிரை
மாலை தங்கக்குதிரை
விழாவின் சிகர நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் மே 6ம் தேதி நடைபெறுகிறது.
மே 7ம் தேதி சப்தாவரணம்
மே 8ம் தேதி - ஆளும்பல்லக்குடன் சித்திரை தேர்த்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
