கல்லூரிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

 
ஓணம்

கேரளத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் இன்று கல்லூரிகளில் ஓணம் பண்டிகையை உற்சாகமாக மாணவிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர். 

ஓணம் கல்லூரி

கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை நாளை 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவிகள் ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

ஓணம்

விழாவிற்கு கல்லூரி துணை முதல்வர்  அருட்சகோதரி எழிலரசி தலைமை வகித்தார். இந்நிகழ்வில்  பல்வேறு துறை மாணவிகள்  அத்தப்பூ கோலம் போட்டு, உற்சாகமாக நடனமாடினார்கள்,  தொடர்ந்து மாணவிகள்  தங்களின் பேராசிரியர்களையும்  அழைத்து நடனமாட வைத்து மகிழ்ந்தனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?