நண்பர் ரோபோ சங்கரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... விஜய் இரங்கல்!
நடிகர் ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோய் காரணமாக சிகிச்சை பலனின்றி ரோபோ சங்கர் காலமானார். இவருக்கு வயது 46. திடீர் உடல்நலக் குறைபாடு காரணமாக செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடலுறுப்புகள் செயலிழந்து வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர். நண்பர் ரோபோ சங்கரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்." என பதிவிட்டுள்ளார். ரோபோ சங்கர் புலி திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
