ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்!

 
ஒரே நாடு ஒரே தேர்தல்

 பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்  நவம்பர் 25 ம் தேதி  தொடங்கி  டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டத்தொடர் நிறைவடையலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா தற்போது  மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல்


மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் தாக்கல் செய்துவிட்டு, அது குறித்து  பேசி வருகிறார். எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பையும் மீறி  சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஆனால், மக்களவையில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே மசோதா நிறைவேறும் என கூறப்படுகிறது. இந்த மசோதா, ‘மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் எனவும், இதன் மூலம் தேர்தல் செலவுகள் வெகுவாக குறைக்கப்படும் எனவும்  தேர்தல் விதிமுறை காரணமாக மக்கள் நலத்திட்டங்கள் அவ்வப்போது தடைபடுவது தடுக்கப்படும்’ என மத்திய அரசு கூறி வருகிறது.  

ஒரே நாடு ஒரே தேர்தல்

இந்த மசோதாவால் இந்திய ஜனநாயகத்தில் பல தீமைகளை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மக்களவையில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டிருக்கும்  நிலையில், மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றம் செய்யப்பட்டு விட்டால், அடுத்து குடியரசு தலைவர் ஒப்புதலோடு மத்திய அரசு, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!