பெற்றோர்களே உஷார்... பெங்களூருவை தொடர்ந்து குஜராத்தில் மேலும் ஒருவருக்கு HMPV வைரஸ்!
இந்தியாவில் சீனாவில் கண்டறியப்பட்ட HMPV வைரசால் பெங்களூருவில் 2 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிகுறிகள், தடுக்கும் முறைகள் குறித்த தகவல்களை வெளியிட்டு மக்களுக்கு எச்சரிக்கை பதிவையும் வெளியிட்டது. இதனையடுத்து தற்போது குஜராத்தில் மனித மெட்டாப்நியூமோவைரஸின் மேலும் ஒரு குழந்தைக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் அகமதாபாத்தில் உள்ள சந்த்கேடா பகுதியில் இருந்து இரண்டு வயது குழந்தைக்கு தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ராஜஸ்தானைச் சேர்ந்த குழந்தை, சளி மற்றும் இருமல் அறிகுறிகளைக் காட்டியதால், சந்த்கேடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தை தற்போது சீராக இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.பெங்களூருவில் ஏற்கனவே மூன்று மற்றும் எட்டு மாத குழந்தைகள் இருவருக்கு HMPV பாதிப்புக்கள் இருப்பதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்ததை அடுத்து இது வந்துள்ளது. பெங்களூரில் 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தையிடம் வழக்கமான கண்காணிப்பு மூலம் HMPV தொற்று கண்டறியப்பட்டது.
#WATCH | Gujarat Health Minister Rushikesh Patel says, "...This (#HMPV) has been detected in a 2-month-old child who arrived from Dungarpur, Rajasthan for Sarwar. The child has been referred from Sarwar to Ahmedabad...We have to follow the dos and don'ts that were followed during… pic.twitter.com/R1C2GKs2Yy
— ANI (@ANI) January 6, 2025
இருவருக்கும் மூச்சுக்குழாய் நிமோனியாவின் வரலாறு இருந்தது -- நிமோனியாவின் ஒரு வடிவம், நுரையீரல் தொற்று. மூச்சுக்குழாய் நிமோனியா நுரையீரலில் உள்ள அல்வியோலி மற்றும் மூச்சுக்குழாய் இரண்டையும் பாதித்துள்ளது.
"நாடு முழுவதும் சுவாச நோய்களைக் கண்காணிக்க ஐசிஎம்ஆர் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளுக்கான வழக்கமான கண்காணிப்பு மூலம் இரண்டு நிகழ்வுகளும் அடையாளம் காணப்பட்டன" என்று சுகாதார அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. பெங்களூருவில் பெண் குழந்தை "டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது", ஆண் குழந்தை "இப்போது குணமடைந்து வருகிறது" என சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டது.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருவருக்கும் சர்வதேச பயணத்தின் வரலாறு இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளது.
எச்எம்பிவி வைரஸ் ஏற்கனவே இந்தியாவில் இருப்பதாகவும், கண்டறியப்பட்ட வழக்குகள் இந்தியாவிலேயே முதன்மையானது என்றும் கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது.இது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை இந்தியாவில் முதல் பதிவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாடு. ஏற்கனவே குறிப்பிட்ட தனி நபர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவிட்துள்ளார். இந்த வைரஸ் இந்தியா, மலேசியா, சீனா உட்பட உலக அளவில் ஏற்கனவே பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன.
"மத்திய சுகாதார அமைச்சகம் கிடைக்கக்கூடிய அனைத்து கண்காணிப்பு சேனல்கள் மூலம் நிலைமையை கண்காணித்து வருகிறது," எனக் கூறியுள்ளது. ICMR ஆனது HMPV புழக்கத்தின் போக்குகளை ஆண்டு முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கும். இதற்கிடையில், "எந்தவொரு சாத்தியமான அதிகரிப்பு சுவாச நோய்களையும் கையாள இந்தியா தயார் நிலையில் உள்ளது மற்றும் தேவைப்பட்டால் பொது சுகாதார தலையீடுகள் உடனடியாக செயல்படுத்தப்படும்” என அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!