இனி விவேகானந்தர் பாறை செல்ல ஆன்லைனில் முன்பதிவு... விடுமுறை தினத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்!

 
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம். அதனருகே மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் கப்பலில் சென்று விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் பார்த்து ரசித்து செல்கின்றனர். கடல் நடுவே பிரம்மாண்டமாக அமைந்துள்ள இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகின்றனர்.  

கன்னியாகுமரி

இவற்றை பார்வையிட பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது. அத்துடன் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி இழை கூண்டு பாலமும் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. 

கன்னியாகுமரி

இந்நிலையில் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல தற்போது ஆன்லைனில் டிக்கெட்டுகளைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இது நாள் வரையில் கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்த நிலையில், https://www.psckfs.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?