10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் சான்றிதழ் படிப்புக்கள்... சென்னை ஐஐடி அழைப்பு!

இணையவழி சான்றிதழ் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கு பள்ளிகளுக்கு சென்னை ஐஐடி அழைப்பு விடுத்துள்ளது. சென்னை ஐஐடி பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் ஏஐ, பிஎஸ் எலெக்ட்ரானிக் சிஸ்டம் ஆகிய இரு படிப்புகளை ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறது.
அதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்கள் சேரும் வகையில் ஏஐ, டேட்டா சயின்ஸ், எலெட்ரானிக் சிஸ்டம் , ஆா்க்கிடெக்சா் டிசைன், என்ஜினீயரிங் பயாலஜிக்கல் சிஸ்டம், சட்டம் தொடா்பான 10 ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நிகழ் கல்வியாண்டில் ஆகஸ்ட், அக்டோபா், ஜனவரி என 3 தொகுதிகளாக இந்தப் படிப்புகள் நடத்தப்படும்.
ஆகஸ்ட் தொகுதிக்கான படிப்பில் சேர விரும்பும் மாணவா்கள் code.iitm.ac.in/schoolconnect இணையதளத்தில் ஜூலை 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐஐடி இயக்குநா் வீ.காமகோடி ஏஐ, டேட்டா சயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம் உட்பட வளா்ந்து வரும் தொழில்நுட்ப துறைகள் குறித்து மாணவா்கள் பள்ளியில் படிக்கும்போதே அறிந்துகொள்ள வேண்டும். அப்போது தான் அவா்களுக்கு அந்தத் துறை மீது பேராா்வம் ஏற்படும். அது அவா்களின் எதிா்காலத்தை நல்ல முறையில் செதுக்கும் எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!