ஓபிஎஸ் என்னிடம் கேட்டிருந்தால், பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்... நயினார் நாகேந்திரன் ’நச்’!
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாக ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து நயினார் நாகேந்திரன் “ஓபிஎஸ் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே அவருடன் தொலைபேசியில் பேசினேன். எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தேன். இருப்பினும், அவர் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து விட்டார் .

ஓபிஎஸ்-இன் முடிவு சொந்தப் பிரச்சினையா அல்லது வேறு காரணங்களா என்பது தெரியவில்லை . மேலும் அவர் , “ஓபிஎஸ் என்னிடம் கேட்டிருந்தால், பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன். ஆகஸ்ட் 26-ல் பிரதமரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்துவேன். இபிஎஸ்-இன் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டார் என்ற கருத்து முற்றிலும் தவறானது” எனவும் விளக்கம் அளித்தார்.

ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தது தொகுதிப் பிரச்சினைக்காகவோ அல்லது சொந்தப் பிரச்சினைக்காகவோ இருக்கலாம். ” என விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வந்தால், NDA-வுடனான உறவை மறுபரிசீலிக்க வாய்ப்பு உள்ளது,” எனவும் கூறியுள்ளார். ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ஜூலை 31, 2025 அன்று NDA-வில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. “பாஜக தலைமை, ஓபிஎஸ்-ஐ புறக்கணித்து விட்டது. இதனால் NDA-வில் தொடர அவசியமில்லை,” என ராமச்சந்திரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
