3000 இந்தியர்களை பணி நீக்கம் செய்யும் ஆரக்கிள்!
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி மென்பொருள் நிறுவனம் ஆரக்கிள் இந்நிறுவனம் இந்தியாவில் சுமார் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் சென்னை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், புனே, நொய்டா, கொல்கத்தா ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது.

ஆரக்கிள் கடந்த ஆண்டு 28,824 பேரை புதிதாக பணியில் சேர்த்துள்ளது.சமீபத்தில் சாட்ஜிபிடியை தயாரித்த ஓபன் ஏஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்புடன் உயர் மட்ட அளவில் ஆலோசனை மேற்கொண்டது.

இதையடுத்தே இந்த அதிர்ச்சிகர முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, இந்தியாவில் சுமார் 10%, சுமார் 3,000 ஊழியர்களை திடீர் பணிநீக்கம் செய்துள்ளது. மென்பொருள் மேம்பாடு, கிளவுட் சேவைகள், வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களை இந்த பணி நீக்கம் கடுமையாக பாதித்துள்ளது. ஏஐ துறை ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் டெக் துறையில் தொடர்ச்சியாக வேலை இழப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
