9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்... எச்சரிக்கையா இருங்க மக்களே!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில் இந்த மழை மேலும் 6 நாட்களுக்கு தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்டோபர் 15ம் தேதி சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் ”தென் தமிழகம் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இன்று மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுபெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 13ம் தேதி மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12ம் தேதி, அக்டோபர்13ம் தேதி தமிழகத்தில் அனேக இடங்களிலும் திருப்பூர், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 14ம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அக்டோபர் 15ல் சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் மிக கனமழை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளிலும் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
