நாளை தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகள், பார்களை மூட உத்தரவு!
நாளை மே தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு வருடத்திற்கு 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதன்படி, நாளை மே 1ம் தேதி உழைப்பளர் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளுக்கும், பார்கள், எப்எல்-2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட சொகுசு ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் எப்எல்3 (ஏ), எப்எல்3 (ஏஏ) மற்றும் எப்எல்11உரிமம் கொண்ட பார்கள் உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

தடையை மீறி நாளை மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனியார் மதுக்கூடங்களில் மதுபானம் விற்பனை செய்வது தெரிந்தால் உரிமத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
