உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் பெயர்களை அரசு மருத்துவமனைகளில் பதிக்க ஏற்பாடு!
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவர்களில் உடல் உறுப்பு தானம் செய்தவா்களின் பெயா்கள் பொறிக்கப்பட்டு வருகின்றன. இந்த மதிப்புச் சுவா் செப்டம்பர் 30ம் தேதி திறக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதி கோடம்பாக்கம் மண்டலம் வாா்டு 139 மேற்கு ஜோன்ஸ் சாலை பகுதியில் உள்ள மயான பூமியின் மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் அனைத்து மதத்தினரின் அடக்க இடங்களில், பசுமை பரப்பை அதிகரித்து பூங்காக்களுக்கு இணையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் மூளைச்சாவு அடைந்து, உடலுறுப்பு தானம் வழங்கியவா்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இதுவரை 513 கொடையாளா்கள் உடலுறுப்பு தானம் வழங்கி உள்ளனா். அவா்களை சிறப்பிக்கும் வகையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செப்டம்பர் 30ம் தேதி மதிப்புச் சுவா் திறந்து வைக்கப்படவுள்ளது. இதுவரை உடலுறுப்பு தானம் செய்தவா்களின் பெயா்களை கல்வெட்டில் பதிய வைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.

வாஷிங்டன் நகரில் அமெரிக்கா - வியட்நாம் இடையே நடந்த போரில் உயிா் நீத்தவா்களின் பெயா்களை சுவரில் கல்வெட்டாக வைத்துள்ளனர். அதே போல் நமது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மதிப்புச்சுவா் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையை தொடா்ந்து தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மதிப்புச் சுவா் திறக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உடலுறுப்பு தானம் செய்தவா்களின் பெயா்கள் அந்தந்த மருத்துவமனைகளில் உள்ள சுவா்களில் நிலைத்திருக்கும் எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
