பகீர்... மனைவியின் சடலத்துடன் வாழ்ந்து வந்த கணவன்!

 
அனுசியா

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் உடல் நலக்குறைவால் மனைவி இறந்து விட்ட நிலையில் அவரது அழுகிய  உடலுடன் கணவர் வாழ்ந்து வந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (59).  இவருக்கு, அனுசியா என்ற மனைவியும், கல்லூரியில் படித்துவரும் இரு மகள்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி உடன் மூர்த்தி பேசிக் கொள்வதில்லை என கூறப்படுகிறது. இந்த சூழலில், தைராய்டு, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அனுசியா படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார். அது தெரியாமல் மூர்த்தி தனியறையிலேயே வசித்து வந்துள்ளார்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !
 இதனிடையே, வார விடுமுறைக்காக அவரது மூத்த மகள் நேற்று இரவு வீட்டிற்கு வந்த நிலையில், வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்து அனுசியாவை பார்க்க சென்றார். அப்போது, அவரது உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதைத்தொடர்ந்து விருத்தாசலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

வணிவரித்துறை  உதவியாளர்  தற்கொலை

உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மனைவி இறந்ததுகூட தெரியாமல் வீட்டிலேயே வசித்து வந்த மூர்த்தியை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web