பஞ்சாயத்து தலைவர் காருக்குள் கழுத்தறுத்து கொலை... பீதியில் கிராம மக்கள்!

 
கருணேஷ் சிங்

 உத்திரபிரதேசம் மாநிலம் பிரதாப் காட் மாவட்டம் தியாஜலால்பூர் கிராம பஞ்சாயத்து தலைவர் 34 வயது  கருணேஷ் சிங் . இவர்  கார் கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் வெகுநேரம் நின்று கொண்டே இருந்தது. இதனை கண்டு சந்தேகம் அடைந்த ஊர் மக்கள் அருகில் சென்று பார்த்தனர். அப்போது காருக்குள் பஞ்சாயத்து தலைவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  

போலீஸ்

உடனடியாக  இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  முன் விரோதம் இருந்ததா , சொந்த பிரச்சனையா, யாராவது பஞ்சாயத்து தலைவரை கடத்தி கொலை செய்தனரா என பல கோணங்களில்   தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web