தனியார் பள்ளி நிகழ்ச்சியில் திடீரென சரிந்து விழுந்த பந்தல்... 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம்!

 
ஷாமியானா பந்தல் சரிந்து

திருச்சியில், தனியார் பள்ளி ஒன்றில் திடீரென ஷாமியானா பந்தர் சரிந்து விழுந்ததில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். திருச்சி கருமண்டபம் பகுதியில் நேற்று காலை சுமார்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கடந்த 10 மற்றும் 12ம் பொதுத் தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

பாராட்டு விழாவைக் காணும் வகையில், பள்ளி மைதானத்தில் ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் ஷாமியானா பந்தலின் கீழ் அமர வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென பலத்த  காற்று வீசத் தொடங்கியதும், பின்பக்க சாமியானா பந்தல் சரிந்து விழுந்ததில்  அந்த இடத்தில் அமர்ந்திருந்த 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

சரிந்து விழுந்த சாமியானா
படுகாயம் அடைந்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சில மாணவர்களுக்கு பள்ளி வளாகத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை கேள்விப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அலறி அடித்து கொண்டு பள்ளியில் குவியத் தொடங்கினர்.  அவரவது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பதை உறுதி செய்து உடனடியாக  தங்கள் பிள்ளைகளை  வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

சரிந்து விழுந்த சாமியானா
 இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும்  விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருது வாங்க வந்த மாணவர்கள் பள்ளியில் படுகாயம் அடைந்தது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web