பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்!
பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ள நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து ஓபிஎஸ் எழுதியுள்ள அந்த கடிதத்தில், "எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை - போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருவீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக கருதுவேன்" என தெரிவித்துள்ளார்
பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பது அரசியல் ரீதியாக கவனம் பெற்றுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
